இந்தியாவில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பாதிப்பிற்கு மொத்தம் 1,436 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2023-08-17 19:48 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு ெதாற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 426 ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 46 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 66 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 14 குறைந்தது. மொத்தம் 1,436 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

2 நாட்களாக உயிரிழப்பு இல்லாதநிலையில், 24 மணி நேரத்தில் கேரளா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 924 ஆக அதிகரித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்