சத்தீஷ்காரில் பள்ளி விடுதியில் 1-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Update: 2023-07-25 23:03 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் சுக்மா மாவட்டத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்துக்குள்ளேயே இருக்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமி சம்பவத்தன்று இரவு விடுதியில் தூங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுமி தனது பொற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்