தீபாவளி தோன்றிய காரணம்

தீபாவளி பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.

Update: 2022-10-25 07:32 GMT

'தீபம்' என்றால் 'விளக்கு', 'ஆவளி' என்றால் 'வரிசை'. தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து இறைவனை வழிபடும் நன்னாளே, தீபாவளித் திருநாள். ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வீசச் செய்யும். அந்த முதல் ஒளியே பரமாத்மா; அதனால் ஒளிபெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள். இந்த உண்மையை உணர்த்தும் வகையில்தான் ஒளி விளக்கு திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது. தீபாவளி பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்..

* நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார் என்ற பழைய மரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியது.

* பிதுர்க்கடன் செய்வது தொடர்பான அடிப்படையில் உருவானது.

* எமதர்மனைப் போற்றும் அடிப்படையில் உருவானது.

* மகாபலி சக்கரவர்த்தியை போற்றும் வகையில் தோன்றியது.

* ராவணனை வதம் செய்த ராமபிரான், தனது மனைவி சீதையுடன் அயோத்தி திரும்பிய தினம் என்று போற்றப் படுகிறது.

இதில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த புராணக் கதையை முன்வைத்தே தீபாவளி பெரும்பாலும் கொண்டாடப் படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்