இன்றைய ராசிபலன் - 05.06.2024


இன்றைய ராசிபலன் - 05.06.2024
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 23-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 9.28 வரை கிருத்திகை பின்பு ரோகிணி

திதி: இன்று மாலை 7.55 வரை சதுர்தசி பின்பு அமாவாசை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 11.30 - 2.00

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை பிற்பகல்: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 1.30 - 2.30

கௌரி நல்ல நேரம் பிற்பகல்: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்

ராசிபலன்

மேஷம்

பிடித்தவர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். மாமியார் உடல்நலத்தில் கவனம் தேவை. சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. வியாபாரத்தில் திருப்புமுனை உண்டாகும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

ரிஷபம்

மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உற்சாகமான நாளாக அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். சற்று சோர்வோடும் களைப்போடும் காணப்படுவீர்கள். சுபச் செலவுகள் அதிகமாகும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்க உதவும். வழக்கு சாதகமாகும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

மிதுனம்

வங்கியில் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தொகை வைப்புநிதியாக செலுத்துவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். விற்பனை பிரதிநிதிகள் தாங்கள் எதிர்பார்த்த ஆர்டர்களை எடுத்து முடிப்பர். வேற்றுமதத்தவர் உதவுவார். பெண்களுக்கு வேலை கிடைக்கும். மார்கெட்டிங்பிரிவினர் தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

கடகம்

குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இளைஞர்கள் காதலில் எச்சரிக்கையாக இருப்பது நலம். குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

சிம்மம்

தடைகளெல்லாம் நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். பணவரவு அதிகரிக்கும். புகழ் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்கள் நண்பர்களாவர். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

கன்னி

இன்று உத்திரம் மற்றும் அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

துலாம்

குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். உடல் நிலை மேம்படும். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். பிடித்த நபரை சந்திப்பீர்கள். சுற்றுலாவை செல்வதற்கு திட்டமிடுவீர்கள். வழக்கறிஞர்கள் செழிப்பர். சகோதர வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

விருச்சிகம்

நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும்.வெளியூர் பயணம் தடைபடும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். விவசாயிகளுக்கு தேவையான கடன் கிடைக்கும். அவர்கள் செழிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் கொள்வர்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

தனுசு

வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைத்து விடுவீர்கள். அலுவலகத்தில் உள்ள நீண்ட நாள் பிரச்சினை தீரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். சுப காரியங்கள் தாமதமாகும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

மகரம்

உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

கும்பம்

உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும்.நண்பர்களிடையே சிறு மனஸ்தாபங்கள் நேரலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எனவே, சொத்து விற்பது, வாங்குவது சம்பந்தமாக கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

மீனம்

சம்பள பாக்கி கைக்கு வரும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் உஷ்ணம் அதிகமாகும். ஆதலால், இளநீர் மற்றும் மோர் அருந்துவது நல்லது. சுபகாரியம் விரைவில் கூடி வரும். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்


Next Story