செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு..!


செப்டம்பர் 1 ஆம் தேதி  முதல் சுங்கக்கட்டணம் உயர்வு..!
x
தினத்தந்தி 25 Aug 2022 1:16 PM GMT (Updated: 25 Aug 2022 3:13 PM GMT)

தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது

சென்னை,

தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்பட உள்ளது.

திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே 22-ல் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.


Next Story