நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி


நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி
x

Image ; AFP 

காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிஸ்மோவா உடன் மோதினார்.

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிஸ்மோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய அனிஸ்மோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனால் சபலென்கா தொடரில் இருந்து வெளியேறினார். இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அனிஸ்மோவா, சக நாட்டு வீராங்கனை நவாரோவை சந்திக்கிறார்.


Next Story