இத்தாலி ஓபன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் மரியா சக்காரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


இத்தாலி ஓபன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் மரியா சக்காரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: AFP

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 64 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சக்காரி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வர்வரா கிராச்சேவாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட மரியா சக்காரி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வர்வரா கிராச்சேவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 32) முன்னேறினார். நாளை நடைபெறும் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டத்தில் மரியா சக்காரி அன்ஹெலினா கலினினாவை எதிர்கொள்கிறார்.


Next Story