சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா, சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா, சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்
x

aryna Sabalenka

Image Courtesy: @CincyTennis

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான டெய்லர் டவுன்சென்ட் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் டவுன்சென்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தின் ஜெசிகா பெகுலா, கனடாவின் லேலா பெர்னாண்டஸ் உடன் மோத உள்ளார்.

இதே பிரிவில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் சபலென்கா, ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோத உள்ளார்.


Next Story