சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் :  இந்திய வீரர் பிரனாய் அடுத்த  சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image : PTI

இந்தியாவின் முன்னணி வீரரான ஹெச்.எஸ். பிரனாய், பெல்ஜியம் வீரர் ஜே. கராக்கியை எதிர்கொண்டார்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஹெச்.எஸ். பிரனாய், பெல்ஜியம் வீரர் ஜே. கராக்கியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடிய பிரனாய் 21-9, 18-21, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அடுத்த சுற்று போட்டியில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை ,பிரனாய் எதிர்கொள்ள உள்ளார்.


Next Story