புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு.பி. யோத்தா வெற்றி


புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு.பி. யோத்தா வெற்றி
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-யு.பி. யோத்தா அணிகள் மோதின.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரட்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாட்னா அணி 34-28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-யு.பி. யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யு.பி. யோத்தா அணி 43-24 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story