புரோ கபடி லீக்: அர்ஜுன் தேஷ்வால் அதிரடி- வெற்றி ஆதிக்கத்தை தொடரும் ஜெய்ப்பூர்


புரோ கபடி லீக்: அர்ஜுன் தேஷ்வால் அதிரடி- வெற்றி ஆதிக்கத்தை தொடரும் ஜெய்ப்பூர்
x

இன்றைய வெற்றியின் மூலம் இந்த சீசனில் ஜெய்ப்பூர் அணி சக்தி வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது.

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் அதன் பிறகு ஹாட்ரிக் வெற்றிகளை குவித்த ஜெய்ப்பூர் அணி அந்த வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கியது. அதே போல் போட்டியின் ஆரம்பம் முதலே ஜெய்ப்பூர் அணி ஆதிக்கம் செலுத்தியது.

குறிப்பாக ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வால் தனது அட்டகாசமான ரெய்டுகளின் மூலம் புள்ளிகளை குவித்து வந்தார். இவரை தடுக்க பெங்கால் அணி வீரர்கள் தடுமாறினர். இறுதியில் ஜெய்ப்பூர் அணி 39-24 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் அணியை பந்தாடி 4-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த சீசனில் ஜெய்ப்பூர் அணி சக்தி வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது.


Next Story