புரோ கபடி : ஹரியானா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி


புரோ கபடி : ஹரியானா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி
x

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலெர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது.இதனால் முதல் பாதியில் 20-12 என முன்னிலை ஜெய்ப்பூர் அணி முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி சிறப்பாக ஆடியதால் இறுதியில் 44-31 என்ற கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.


Next Story