பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் நிதிஷ் குமார் அரையிறுதிக்கு முன்னேற்றம்


பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் நிதிஷ் குமார் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

இந்தியாவின் நிதிஷ் குமார், தாய்லாந்து வீரர் மோங்கான் பன்சன் ஆகியோர் மோதினர்.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், தாய்லாந்து வீரர் மோங்கான் பன்சன் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் நிதிஸ்குமார் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


Next Story