பாரா வில்வித்தை - ஷீத்தல் தேவி-ராகேஷ் குமார் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது


பாரா வில்வித்தை - ஷீத்தல் தேவி-ராகேஷ் குமார் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது
x

பாரா வில்வித்தை கலப்பு அணி காம்பவுண்ட் ஓபனில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பாரா வில்வித்தை கலப்பு அணி காம்பவுண்ட் ஓபனில் வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி - ராகேஷ் குமார் ஜோடி, இத்தாலியின் சர்தி எலியோனோரா - பொனாசினா மேட்டியோ ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் ஷீத்தல் தேவி - ராகேஷ் குமார் ஜோடி 156-155 என்ற புள்ளி கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.


Next Story