இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் ஸ்ரீ காந்த் தோல்வி ..! தொடரிலிருந்து வெளியேறினார்


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் :  இந்தியாவின் ஸ்ரீ காந்த் தோல்வி ..! தொடரிலிருந்து வெளியேறினார்
x

Image Courtesy : PTI 

தினத்தந்தி 15 Jun 2022 9:33 PM GMT (Updated: 15 Jun 2022 9:34 PM GMT)

ஸ்ரீகாந்த் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ,பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டெஸிடம் மோதினார் .

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 23-21,21-10 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார் .இதனால் அவர் இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றோரு போட்டியில் இந்திய வீரர்கள் பிரணாய் ,லக்சயா சென் ஆகியோர் மோதினர் .இந்த ஆட்டத்தில் 21-10,21-9 என்ற கணக்கில் பிரணாய் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் .


Next Story