ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் காலிறுதிக்கு தகுதி


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் காலிறுதிக்கு தகுதி
x

Image : PTI 

இந்தியாவின் பிரனாய், 53-வது தரவரிசையில் உள்ள பிரேசில் வீரரான மிஷா ஜில்பர்மேனுடன் மோதினார்

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனாய், 53-வது தரவரிசையில் உள்ள பிரேசில் வீரரான மிஷா ஜில்பர்மேனுடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 21-17, 21-15 என்ற கணக்கில் மிஷா ஜில்பர்மேனை வீழ்த்தினார். இதனால் அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 114-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சமீர் வர்மாவும் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சிங்கப்பூர் வீரரான லோ கீன் யூவும் மோதினர்.இதில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-14, 14-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.


Next Story