சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை: ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்


சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை: ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்
x

Image Courtesy: PTI

இந்திய ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி ஜப்பான் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

ஜோகூர்,

21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10-வது சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை தொடர் தற்போது மலேசியாவின் ஜோகூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்திய ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி ஜப்பான் எதிர்கொண்டு விளையாடியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஜப்பான் அணி தரப்பில் சயேகி (15-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இந்திய அணி தரப்பில் கேப்டன் உத்தம் சிங் (3-வது நிமிடம்), ரோகித்(12-வது நிமிடம்), ஜான்சன்(21-வது நிமிடம்), தாமி பாபி(31-வது நிமிடம்), அமன்தீப்(51-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்தியா தனது முதல் போட்டியில் மலேசியாவை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் 5-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தனது நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.


Next Story