அந்த 1 ரன்னை நாங்கள் அடித்திருக்க வேண்டும் - ரோகித் சர்மா ஏமாற்றம்


அந்த 1 ரன்னை நாங்கள் அடித்திருக்க வேண்டும் - ரோகித் சர்மா ஏமாற்றம்
x

இந்தியா - இலங்கை மோதிய முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்தது.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதே போல ஆட்டம் சமனில் இருந்தபோது கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில், ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்தனர். இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் அசலன்கா தலா 3 விக்கெட்டுகளும், வெல்லலகே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்நிலையில் அந்த 1 ரன்னை இந்திய அணி எடுத்திருக்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் தர்மா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். பேட்டிங்கில் தங்களுடைய கை மேலோங்கி இருந்தும் தொடர்ச்சியாக வேகமாக ரன்கள் எடுக்காதது தோல்வியை கொடுத்ததாகவும் அவர் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"இந்த இலக்கு எட்டக்கூடியது. அதை எட்டுவதற்கு நீங்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். சீரான இடைவெளிகளில் நாங்கள் நன்றாகவே பேட்டிங் செய்தோம். இருப்பினும் தொடர்ச்சியான வேகம் இல்லை. எங்கள் கை மேலோங்கி இருந்த போது சில விக்கெட்டுகளை இழந்தோம். ராகுல் - அக்சர் பார்ட்னர்ஷிப் அமைத்த போது நாங்கள் கம்பேக் கொடுத்தோம். ஆனால் கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது.

இது போன்ற விஷயங்கள் நடக்கும். இலங்கையும் நன்றாக விளையாடினார்கள். இருப்பினும் கடைசியில் நியாயமான முடிவு கிடைத்தது. பிட்ச் மாறாமல் அப்படியேதான் இருந்தது. ஆனால் அதில் நீங்கள் வந்ததும் அதிரடியாக விளையாட முடியாது. நீங்கள் கொஞ்சம் நின்று விளையாட வேண்டும். பல்வேறு நேரங்களில் இப்போட்டி இரு அணிகளின் பக்கமும் சென்றது. நாங்கள் அந்த ஒரு ரன்னை எடுத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story