டிஎன்பிஎல்: திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அசத்தல் வெற்றி


டிஎன்பிஎல்: திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அசத்தல் வெற்றி
x

14 .5ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 122ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.


கோவை,

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. . இதன்படி கோவையில் இன்று இரவு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதின .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி அணி தடுமாறியது. இதனால் திருச்சி அடுத்தடுத்து விக்கெட் இழந்தது.

19.1 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 10 விக்கெட் இழந்து 120 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆர். ராஜ் குமார் 39 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் , அஸ்வின் , சரவண குமார் , சுபோத் பதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 121 ரன்கள் இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடியது .

தொடக்க வீரர்களாக ஷிவம் சிங் ம் விமல் குமார் ஆகியோர் களமிறங்கினார். தொடக்கத்தில் விமல் குமார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பாபா இந்திரஜித் , ஷிவம் சிங் உடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 22 ரன்கள் எடுத்த நிலையில் இந்திரஜித் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிவம் சிங் அதிரடி காட்டினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த வீரர்கள் நிலைத்து ஆடினர். இறுதியில் ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்து வந்த பாபா இந்திரஜித் , ஷிவம் சிங் உடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 22 ரன்கள் எடுத்த நிலையில் இந்திரஜித் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிவம் சிங் அதிரடி காட்டினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த வீரர்கள் நிலைத்து ஆடினர். இறுதியில் 14.5ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 122ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.


Next Story