இந்த தோல்வி எங்களுக்கு ஒரு பாடமாக மாறியுள்ளது - சஞ்சு சாம்சன்


இந்த தோல்வி எங்களுக்கு ஒரு பாடமாக மாறியுள்ளது - சஞ்சு சாம்சன்
x

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : "பவர்பிளேவின்போது மைதானம் சற்று இருதன்மை உடையதாகவும், ஸ்லோவாகவும் இருந்தது. எனவே நாங்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 170 ரன்கள் வரை செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் இந்த போட்டியில் 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். சிமர்ஜீத் சிங் சிறப்பாக பந்து வீசினார்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான முடிவுதான். ஆனால் மைதானத்தின் தன்மையை கணித்து எங்களால் அதற்கு ஏற்றார் போன்று விளையாட முடியவில்லை. இந்த தோல்வி எங்களுக்கு ஒரு பாடமாக மாறியுள்ளது. இந்த தோல்வி இனிவரும் போட்டிகளில் நடைபெறாமல் இருக்க சரியான இடங்களில் நாங்கள் எங்களது உழைப்பை அதிகரிக்க இருக்கிறோம்" என்று கூறினார்.


Next Story