சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா....!


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா....!
x

image courtesy; twitter/@BCCI

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார்.

பெங்களூரு,

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் பரீத் அகமது கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது பந்து வீச்சில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். மற்றொரு நம்பிக்கை நட்சத்திர வீரரான ஷிவம் துபே அஸ்மத்துல்லா பந்து வீச்சில் சிக்கினார்.

22 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். முதலில் நிதானமாக விளையாடிய இருவரும் நேரம் செல்ல செல்ல அதிரடியில் வெளுத்து வாங்கினர். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ரிங்கு சிங் தனது பங்கிற்கு 69 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்தது.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா அடித்த சதம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது 5-வது சதமாக பதிவானது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 5 சதங்களுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் 4 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.



Next Story