மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்... பிளே ஆப் வாய்ப்பை இழந்த குஜராத்


தினத்தந்தி 13 May 2024 5:19 PM GMT (Updated: 13 May 2024 9:51 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற இருந்த குஜராத் - கொல்கத்தா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

அனல் பறக்க நடந்து வரும் நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அமகதாபாத்தில் இன்று நடைபெற இருந்த 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாட இருந்தன.

ஆட்டம் இரவு 7.30 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மாலை முதல் அகமதாபாத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்ட்டது. 7.30 மணிக்கு தொடக்கவேண்டிய ஆட்டம் இன்னும் தொடங்கவில்லை. இதன் காரணமாக இந்த ஆட்டம் டாஸ் கூட சுண்டப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்டம் கைவிடப்பட்டதன் காரணமாக முன்னாள் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் நடப்பு சீசனில் பிளே ஆப் வாய்ப்பை இழந்து 3-வது அணியாக வெளியேறுகிறது. குஜராத் 13 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது.


Next Story