சேப்பாக்கம் மைதானத்தில் 50-வது வெற்றி - ரசிகர்களுடன் கொண்டாடிய சென்னை அணி வீரர்கள்


சேப்பாக்கம் மைதானத்தில்  50-வது வெற்றி - ரசிகர்களுடன் கொண்டாடிய சென்னை அணி வீரர்கள்
x

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின . டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி , முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 142 ரன்கள் இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.2ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம், சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்தது. ஐ.பி.எல். தொடரில் ஒரே மைதானத்தில் 50 வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டன் மைதானத்தில் 52 வெற்றிகளை பெற்றுள்ளன.

இந்த நிலையில் 50- வது வெற்றி கொண்டாடும் வகையில், சென்னை வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களுக்கு சென்னை அணி வீர்ரகள் சிறப்பு பரிசுகள் வழங்கி அவ்ரகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story