2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு


2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு
x

image courtesy: twitter/@TheRealPCB

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது போட்டியில் வங்காளதேச அணி பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்ததன் காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 2-வது நாளான இன்று இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.


Next Story