காருடை அய்யனார் கோவில் திருவிழா


காருடை அய்யனார் கோவில் திருவிழா
x

சேதுபாவாசத்திரம் அருகே காருடை அய்யனார் கோவில் திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்;

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கைவனவயல் காருடைய அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு காப்பு அணிவிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று. நேற்று முன்தினம் பேராவூரணியில் இருந்து சுமார் 10 கி.மீட்டா தூரம் நடைபயணமாக சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இரவு கிடாவெட்டு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் உடையநாடு, முடச்சிக்காடு, வீரியங்கோட்டை, ஊமத்தநாடு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story