சுந்தரர்-பரவைநாச்சியார் திருக்கல்யாணம்


சுந்தரர்-பரவைநாச்சியார் திருக்கல்யாணம்
x

சுந்தரர்-பரவைநாச்சியார் திருக்கல்யாணம்

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார்-பரவைநாச்சியார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி சுவாதி நட்சத்திரத்தையொட்டி நேற்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கொடிமரம் எதிரில் சுந்தரர்-பரவைநாச்சியார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை திருவாரூர் புதுத்தெருவில் உள்ள நாலுகால் மண்டபத்திலிருந்து சுந்தரர் புறப்பட்டு தியாகராஜர் கோவிலை வந்தடைந்தார். முன்னதாக தியாகராஜர் அலங்காரத்துடன் எழுந்தருளினார். தொடர்ந்து பரவை நாச்சியார் கோவிலில் இருந்து பெண் அழைப்பு நடைபெற்றது. பின்னர் சுந்தரர்-பரவைநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story