மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

பிரசித்திப் பெற்ற மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவொற்றியூர்:

சென்னை மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி பிரசித்திப் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று காலை அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக்கொடியை கையில் ஏந்தியபடி பதி வலம் வந்தனர். காலை 7 மணியளவில் திருநாம கொடியேற்றப்பட்டது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் பணிவிடை உச்சிப்படிப்பு நிகழ்ச்சி மாலையில் திருஏடு வாசிப்பு இரவு அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருகிறார். தொடர்ந்து விழா நடக்கும் நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பதிவலம் வருவார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண ஏடு வாசிப்பு சரவிளக்கு பூஜை 14 ம் தேதியும், அய்யா வைகுண்ட தர்மபதி திருத்தேர் உற்சவம் 16-ம் தேதியும், நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு அய்யா பூப்பல்லாக்கில் பதிவலம் வருதல் பின் இரவில் திருநாம கொடி அமர்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story