ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் பணம் ரூ.1 கோடியை தாண்டியது


x

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் உண்டியல் பணம் திறந்து எண்ணப்பட்டது.

ராமேஸ்வரம்:

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் திறந்து எண்ணப்பட்டது.

துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதில் கடந்த 1 மாதத்திற்கான உண்டியல் வருமானமாக ரூபாய் 1 கோடியே 31 ஆயிரத்து 878 பணமும், 88 கிராம் 500 மில்லி கிராம் தங்கமும், 2 கிலோ 310 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story