இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான 2-வது சுற்று தேர்தலிலும் ரிஷி சுனக் வெற்றி


இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான 2-வது சுற்று தேர்தலிலும் ரிஷி சுனக் வெற்றி
x

கோப்புப்படம்

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான 2-வது சுற்று தேர்தலிலும் ரிஷி சுனக் வெற்றிபெற்றுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில் ரிஷி சுனக் 88 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல்சுற்று வாக்குப்பதிவை 8 வேட்பாளர்கள் எதிர்கொண்ட நிலையில் 2 பேர் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.

அந்த வகையில் ரிஷி சுனக் உட்பட 6 வேட்பாளர்கள் நேற்று 2-வது சுற்று வாக்குப்பதிவை எதிர்கொண்டனர். இதில் ரிஷி சுனக் 101 வாக்குளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் 27 வாக்குகளை மட்டுமே பெற்றதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 3-வது சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story