நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் பலி


நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் பலி
x

கோப்பு படம்

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று அந்நாட்டின் வடமேற்கே மலை பகுதியில் சென்றபோது, திடீரென விபத்தில் சிக்கியது.

காத்மண்டு,

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து இன்று மதியம் 1.54 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு ரசுவா பகுதியை நோக்கி சென்றுள்ளது. எனினும், புறப்பட்ட 3 நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது.

9என்-ஏ.ஜே.டி. என்ற எண் கொண்ட ஏர் டைனஸ்டி வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஆனது, அந்நாட்டின் வடமேற்கே மலை பகுதியில் சென்றபோது, திடீரென விபத்தில் சிக்கியது.

இதில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து உள்ளனர். நுவகோட் மாவட்டத்தில் சிவபுரி பகுதியில் வார்டு எண் 7-ல் இருந்து பயணிகள் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களில் 2 பேர் ஆண்கள். ஒருவர் பெண் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

விமானியும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார். மற்றொரு உடல் அடையாளம் காண முடியாதபடி விபத்தில் கருகி இருந்தது. இதில், பயணம் செய்த 4 பேர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


Next Story