எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு: 13 பேர் பலி


எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு: 13 பேர் பலி
x

எத்தியோப்பியாவில் ஏற்பட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.

ஏடிஸ் அபாபா,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் ஹொலைதா மாகாணம் கிண்டோ டிட்யே மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக டிட்யே மாவட்டத்தில் நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


Next Story