‘உயிரோடு உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள்’ - ரஷிய துருப்புகளுக்கு உக்ரைன் வீரர்கள் எச்சரிக்கை


‘உயிரோடு உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள்’ - ரஷிய துருப்புகளுக்கு உக்ரைன் வீரர்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 March 2022 10:49 PM GMT (Updated: 25 March 2022 10:49 PM GMT)

உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

கீவ்,

வல்லரசு நாடான ரஷியாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுக்கு இந்தப் போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை களப்பலியாக கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இருக்கிற ரஷிய துருப்புகளை உயிரோடு ரஷியாவுக்கு ஓடிவிடுமாறு உக்ரைன் படை வீரர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுபற்றி உக்ரைன் படை வீரர் ஒருவர், “ஓடுங்கள். ஓடி விடுங்கள். குழந்தைகளை கொல்லாதீர்கள். வீடுகளை, குடும்பங்களை அழிக்காதீர்கள். உயிரோடு இருக்கும்போதே உங்கள் நாட்டுக்கு ஓடி விடுங்கள்” என கூறியதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரில் ரஷியா 1 லட்சத்து 90 ஆயிரம் துருப்புகளை களமிறக்கி உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் துருப்புகள் வரையில் இந்தப் போரில் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு கூறுகிறது.

Next Story