போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2022 6:45 PM (Updated: 31 Oct 2022 6:47 PM)
t-max-icont-min-icon

கடையம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 28). இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story