கிராம உதவியாளர்கள் பணிக்கு எழுத்து தேர்வு


கிராம உதவியாளர்கள் பணிக்கு எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:47 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர்கள் பணிக்கு 10 மையங்களில் நாளை எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர்கள் பணிக்கு 10 மையங்களில் நாளை எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை எழுத்து தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தாசில்தார்கள் மூலம் விண்ணப்பங்களை கூராய்வு செய்யப்பட்டது., ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எழுத்து தேர்வு மாவட்டத்தில் 10 மையங்களில் நடைபெறுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் ஆகிய 3 மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது. இதேபோன்று பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, ஒரப்பம் சிவகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. போச்சம்பள்ளி தாலுகாவில், ஜம்புகுட்டப்பட்டி ராசி நகர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும், ஓசூர் தாலுகாவில் அதியமான் பொறியியல் கல்லூரியிலும் தேர்வு நடக்கிறது.

குறுஞ்செய்தி

இதேபோன்று தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் இந்த எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இணைய வழியில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வில் கலந்துகொள்ள குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். மேலும் கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https:agaram.tn.gov.in/onlineforms/formpage-open.php?id=43.174 என்ற இணைய தளத்தில் அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மற்றும் பதிவஞ்சல் மூலம் அனுமதி சீட்டு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரர்கள் விதிமுறைகளை பின்பற்றி தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story