ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமையையொட்டிசூலினி ராஜதுர்க்கைக்கு சிறப்பு வழிபாடுஏராளமான பெண்கள் தரிசனம்


ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமையையொட்டிசூலினி ராஜதுர்க்கைக்கு சிறப்பு வழிபாடுஏராளமான பெண்கள் தரிசனம்
x
தினத்தந்தி 1 Aug 2023 7:30 PM GMT (Updated: 1 Aug 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமையையொட்டி தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள சூலினி ராஜதுர்க்கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி சூலினி ராஜதுர்க்கைக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வடமாலை சாற்றப்பட்டு அம்மனுக்கு சிறப்பு உபகார பூஜைகளும், அலங்கார சேவையும் நடைபெற்றது. பின்னர் சூலினி ராஜதுர்க்கை சுய ரூபக் காட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், கோவில் அர்ச்சகர் செல்வ முத்துக்குமாரசாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story