உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

திருவாரூரில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

திருவாரூர்


தண்ணீரை சேமிப்பது மற்றும் பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஏராளமான இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும். அதன் ஒரு பகுதியாக நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நகராட்சி மேலாளர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் முடிவு பெற்றது. இதில் துப்புரவு ஆய்வாளர்கள் தங்கராமன் மற்றும் ரவிச்சந்திரன், நகராட்சி பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story