தொழிலாளி தற்கொலை முயற்சி


தொழிலாளி தற்கொலை முயற்சி
x

களக்காடு அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மீனவன்குளத்தை சேர்ந்தவர் வேலையா மகன் சண்முகம் (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவிக்கும், உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரது மனைவியை வீட்டை விட்டு விரட்டும் படி, உறவினர்கள் சண்முகத்திடம் கூறி வந்தனர். இதுபற்றி சண்முகம் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரித்து, சமாதானமாக செல்லும் படி கூறினர். ஆனால் சண்முகம் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் சண்முகம் விஷம் குடித்து வீட்டில் மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story