மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்


மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்
x

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்

ராமநாதபுரம்

பரமக்குடி

பரமக்குடியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்காக 2-வது கட்டமாக விண்ணப்ப படிவம் வழங்கும் விழா நடந்தது. இதற்கு பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கி விண்ணப்பங்களை வழங்கி தொடங்கி வைத்தார். நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன், நகர் மன்ற உறுப்பினர்கள் வடமலையான், கிருஷ்ணவேணி முத்து பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 33-வது வார்டு செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார். இதில் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் அருளாந்து, ம.தி.மு.க. நகர் செயலாளர் பிச்சைமணி, முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜானகிராமன், கலீல் ரகுமான், இளைஞரணி தர்மராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story