பாம்பு கடித்து பெண் சாவு


பாம்பு கடித்து பெண் சாவு
x

பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமம் கழிச்சமேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி பழனியம்மாள்(வயது 45). இவர் சம்பவத்தன்று அதிகாலை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தபோது அவரை பாம்பு ஒன்று கடித்தது. இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் சத்யநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story