விபத்தில் பெண் சாவு


தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:45 PM GMT)

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய பெண் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி விமலா (வயது 42). இவர்கள் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் வர்த்தகரெட்டிபட்டி விலக்கில் ரோட்டை கடக்க முயன்றார்களாம். அப்போது, நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விமலா நேற்று பரிதாபமாக இறந்தார். கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story