ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-மத்திய அரசுக்கு துரை வைகோ கேள்வி


ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-மத்திய அரசுக்கு துரை வைகோ கேள்வி
x

வட மாநிலங்களில் கலவரம் ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு துரை வைகோ கேள்வி எழுப்பினார்.

திருச்சி

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நடித்த மாமனிதன் வைகோ திரைப்படத்தை வெளியிட்டு அதனை கண்டு ரசித்தார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ம.தி.மு.க. கட்சி நூறாண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காகவும், மறுமலர்ச்சி குடும்பங்களின் தியாகத்தை போற்றவும் மாமனிதன் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மாமனிதன் வைகோ படம் இன்று (நேற்று) திருச்சியில் திரையிடப்பட்டது. நேற்று (நேற்று முன்தினம்) கோவையிலும், அதற்கு முன்னர் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலியில் திரையிடப்பட்டது.

தேசப்பாதுகாப்பு கருதி பி.எப்.ஐ. அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் பா.ஜனதாவுடன் தொடர்புள்ள ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் வட மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அண்ணன், தம்பிகளாக பழகும் இந்து-முஸ்லிம்களிடம் வேற்றுமையை உருவாக்கி வாக்கு வங்கியை நிரப்ப சில சக்திகள் முயற்சிக்கிறார்கள். அதற்கு நாம் பலியாகி விடக்கூடாது. அடிப்படை தேவைகளை பற்றி பேசாமல் சாதி, மத அடிப்படையில் அரசியல் நடக்கிறது. பொதுமக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். ஓசி பஸ்சில் பெண்கள் பயணிக்கிறார்கள் என்ற அமைச்சர் பொன்முடி கருத்து குறித்து கேட்டதற்கு, அவர் கூறிய கருத்து தவறான விதத்தில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்ற அண்ணாமலையின் கருத்துக்கு "அவதூறு அண்ணாமலை" நிறைய கருத்துக்களை கூறி வருகிறார். இங்கு மதக்கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது இது போன்ற கருத்துக்கள் அவர் சொல்வதின் நோக்கம் என்ன?" ஒரு ஐ.பி.எஸ். படித்த நபர் இது போன்ற கருத்துக்களை கூறுவது சரியல்ல என்று தெரிவித்தார்.


Next Story