பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுகவுக்கு கவர்னரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? - அண்ணாமலை


பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுகவுக்கு கவர்னரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? - அண்ணாமலை
x

பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுகவுக்கு கவர்னரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுக கட்சியினருக்கு கவர்னரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்லும் நீங்கள் கவர்னரின் உரையில் என்ன குறை கண்டீர்? சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது தமிழக கவர்னரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று கவர்னர் நிர்பந்திக்கவில்லை. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநில புனரமைவுக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கை தனித்தமிழ்நாடு என்று சுருங்கியது.

இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷ செடிகளை வளர்த்து விட்டதில் திமுகவின் பங்கு அனைவரும் அறிவர். வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசைதிருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது" என்று கூறியுள்ளார்.



Next Story