லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை


லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை
x

விருத்தாசலம் அருகே லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர்

கடலூர்,

விருத்தாசலம் அருகே உள்ள தெற்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவர் தனக்கு குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதிச்சான்றிதழ் கேட்டு இருப்பு கிராமத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சீனுவாசனிடம் மனு கொடுத்தார். இதை பெற்ற அவர் லஞ்சமாக ரூ.1500 கேட்டார். ஆனால் லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத குமரவேல், இது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 21.10.2008 அன்று குமரவேலிடம் லஞ்சம் வாங்கிய போது சீனுவாசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பிரபாகரன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் சீனுவாசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராதத்தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story