வள்ளலார் முப்பெரும் விழா பேச்சுப்போட்டி


வள்ளலார் முப்பெரும் விழா பேச்சுப்போட்டி
x

நெல்லையப்பர் கோவிலில் வள்ளலார் முப்பெரும் விழா பேச்சுப்போட்டி நடந்தது.

திருநெல்வேலி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகள் நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 300 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 23-ந் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கவிதா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story