அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கலெக்டர் அலுவலகம் அருகே அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு எச்.எம்.எஸ். கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். கண்காணிப்புக்குழு உறுப்பினர் கலைவாணி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பேரவை செயல் தலைவர் கே.வி.திருப்பதி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனதாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு கட்ட அளித்திடும் ரூ.4 லட்சம் மானியத்தை பெற எளிய நடைமுறையை உருவாக்க வேண்டும். 18 நல வாரியங்களிலும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் எம்.பி.ராமச்சந்திரன், சிம்புதேவன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story