வேப்ப மரங்கள் வெட்டி கடத்தல்


வேப்ப மரங்கள் வெட்டி கடத்தல்
x
தினத்தந்தி 4 July 2023 11:25 AM GMT (Updated: 5 July 2023 9:57 AM GMT)

பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சியில் வி.ஐ.பி. நகர் அமைந்துள்ளது.

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சியில் வி.ஐ.பி. நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு குடியிருப்பு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு நன்கு வளர்ந்திருந்த 8 வேப்ப மரங்களை யாரோ முழுமையாக வெட்டி உள்ளனர். மேலும் அங்கிருந்த சில மரங்களின் பெரிய, பெரிய கிளைகளையும் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story