விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x

ராதாபுரம் அருகே விவசாயிகளுக்கு சிறுதானிய மீட்டெடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் வட்டாரம் கஸ்தூரிரெங்கபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு சிறுதானிய மீட்டெடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது. வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வறவேற்றார். ராதாபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜாஸ்மின் லதா தலைமை தாங்கி விவசாயிகளுக்கு கையேடு வழங்கி சிறுதானியம் பயிரிடுவதன் நன்மைகளையும், உதவி தொழில் நுட்ப மேலாளர் சரிகா, உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தனர். உதவி தொழில் நுட்ப மேலாளர் சுபா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் லீனஸ் பவுல்துரை செய்திருந்தார்.


Next Story