குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x

கோப்புப்படம் 

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story