மதுரை-மும்பை இடையே சுற்றுலா ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மதுரை-மும்பை இடையே சுற்றுலா ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

மதுரை-மும்பை இடையே சுற்றுலா ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மக்களின் சுற்றுலா பயணத்திற்கான 'பாரத் கவுரவ் சுற்றுலா' ரெயில் நாளை மதுரை - மும்பை இடையே இயக்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் (வ.எண்:06905) அக்டோபர் மாதம் 4-ந்தேதி காலை 8.30 மணிக்கு மும்பையைச் சென்றடையும்.

இதேபோல, மறுமார்க்கமாக அக்டோபர் 4-ந்தேதி இரவு 7 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் அதே ரெயில் (06906) 7-ந்தேதி இரவு 9.15 மணிக்கு மதுரையை வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story