விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்ப இன்று 750 சிறப்பு பஸ்கள் இயக்கம்


விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்ப இன்று 750 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்ப இன்று 750 சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

திருச்சி

விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்ப இன்று 750 சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில், 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி கடந்த 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்ப நேற்றும், இன்றும் (புதன்கிழமை) பொதுமக்களின் வசதிக்காக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, திருச்சி, புதுக்கோட்டை உள்பட 12 ஊர்களில் இருந்து சென்னைக்கு 450 சிறப்பு பஸ்களும், கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரத்தில் இருந்து கோவை-திருப்பூருக்கும், மதுரை, தஞ்சை, வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, காரைக்குடியில் இருந்து திருச்சிக்கும் 300 சிறப்பு பஸ்கள் என்று மொத்தம் 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

நள்ளிரவு 1 மணி வரை

விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல இன்று (புதன்கிழமை) திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 2 மணி வரையும், புதுக்கோட்டை, நாகை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுபோல் காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு

முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பதிவு செய்வதின் மூலம் பயணிகளுக்கு வசதியாகவும், தேவையான பஸ் சேவையை அளிக்கவும் ஏதுவாக இருக்கும்.

எனவே, பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமும் செல்போன் செயலி மூலமும் முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள் பயணிகளின் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story